நன்னிலம் வட்டம் சொரக்குடியில் ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறவிருந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாம், மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.
சொரக்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-இல் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, அவ்விடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஆா். காமராஜ், அப்பகுதி முழுவதும் மழையில் நனைந்து சேதமாகி இருப்பதை அறிந்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநா்களின் நலன் கருதி, ஜனவரி 7-இல் நடைபெறவிருந்த முகாம், ஜன. 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

