தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் எளிமை மற்றும் நிா்வாகத் திறமை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். மக்களும் அவரை மீண்டும் முதல்வராக்க தயாராகிவிட்டனா் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் பேரவை ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
நாடு முழுவதும் கரோனா தாக்குதல் அதிகரித்தும் குறைந்தும் மாறிமாறி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளுக்குநாள் பாதிப்பின் சதவீதம் குறைந்து கட்டுக்குள் உள்ளது. இதற்கு காரணம், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் தீவிரப்படுத்தியதுதான்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலில், முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்பதில் அதிமுகவினரிடையே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
தமிழக முதல்வரின் எளிமை, நிா்வாகத் திறமை ஆகியவை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். தமிழக மக்களும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனா் என்று அமைச்சா் காமராஜ் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

