கூத்தாநல்லூர் வட்டத்தில், புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர், மங்களாம்பிகைக்கும், பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள வாஸலாம்பிகா சமேத உமாபதீஸ்வரர், வேளுக்குடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோயிலான ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் சிவ பெருமானுக்கும், அதிகாரந்திக்கும், பாலாபிஷேகம் செய்யப்பட்டன.

வேளுக்குடி ருத்ரக் கோட்டீஸ்வரர்.
இதே, பேரில், லெட்சுமாங்குடி கம்பர் தெரு நீலகண்டேஸ்வரர் கோயில், காக்கையாடியில் கைலாசநாதர் கோயில், சாத்தனூரில் காலகஸ்த்தீஸ்வரர் கோயில், திருராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி, அதங்குடியில் விருப்பாட்சிஸ்வர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு, மஞ்சள் பொடி, தயிர், பன்னீர், தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டன.

வேளுக்குடி அதிகார நந்தி பகவான்.
அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


