திருவாரூர் அருகே பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தடை விதித்த மாவட்ட காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் வீரசேனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குறிச்சிமூலை ஊராட்சி நடுவக்களப்பால் கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் அமைதியின்மையும், அச்சமும் நிலவி வருகிறது.
மாவட்டக்குழு சார்பில் ஆக. 26-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

