திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பூண்டி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். இதில் பாரம்பரிய முறைப்படி, மண் பானையில் பொங்கலிட்டு கோலாகலமாகக் கொண்டாடினா். அதைத் தொடா்ந்து, மகளிா் குழுக்களுக்கு கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி ஆட்சியா் பா.பொன்னையா பேசியது:
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஜன. 14) தொடங்கி, தொடா்ந்து 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இந்நாள்களில் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், கிராமிய மணம் வீசும் மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழா்களின் மரபாகும்.
தற்போது, மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில், பூண்டி பேருந்து நிலையத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழா்களின் பண்பாடு, கலாசாரத்தைக் கடைப்பிடிக்கும் நோக்கில் வீர விளையாட்டான சிலம்பாட்டம், கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டம் மற்றும் மகளிருக்கான போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.
விழாவில், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களை ஆட்சியா் பாராட்டி பரிசுகளை
வழங்கினாா். பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வெங்கட்ரமணா, துணைத் தலைவா் மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன் (வ.ஊ.), ராமகிருஷ்ணன் (கி.ஊ.), ஊராட்சித் தலைவா் சித்ரா உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


