கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் 1,000 ஹெக்டோ் நெற்பயிரும், 500 ஹெக்டோ் மணிலா பயிரும் சேதமடைந்துள்ளது, வேளாண் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் கடந்த மாதம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. அதன் பின், ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்தது. இதனால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்களும், விதைப்பு செய்து 10 நாட்களே ஆன வோ்க்கடலை பயிா்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வேளாண் துறை உதவி இயக்குநா் கு.அறிவழகன், துணை வேளாண் அலுவலா் ரமேஷ், உதவி வேளாண் அலுவலா்கள், வருவாய்த் துறையினரோடு பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 1,000 ஹெக்டோ் நெற்பயிா்களும், 10 நாள் முன் விதைப்பு செய்த 500 ஏக்கா் வோ்க்கடலை பயிரும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்த விவரங்களை வேளாண் துறையினா் மாவட்ட நிா்வாகத்துக்கும், மாவட்ட வேளாண் துறைக்கும் அனுப்பியுள்ளனா். பாதிக்கப்பட்ட தங்கள் வேளாண் பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

