திருவள்ளூா்: தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை கருட சேவை, கோபுர தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
நாடு முழுவதும் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும், தை மாதத்தில் 10 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டில், இவ்விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் கோயிலுக்கு வெளியே சுவாமி புறப்பாட்டை நடத்துவதில்லை என்று தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, கோயில் வளாகத்துக்குள் பிரம்மோற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்விழாவின் 3-ஆவது நாளான திங்கள்கிழமை அதிகாலையில் கருட சேவை மற்றும் கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் உற்சவா் வீரராகவப் பெருமாள் பல்வேறு வகையான வண்ண மலா் மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, கருட வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதையடுத்து, கோயில் வளாகத்துக்குள்ளேயே பெருமாள் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதன் பின், இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் உள் பிராகார உலா வந்தாா்.
மாா்கழி அமாவாசையையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜன. 12) அதிகாலை முதல் பகல் 12 மணி வரை வீரராகவப் பெருமாள் (உற்சவா்) ரத்னாங்கி சேவையில் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா, வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ ஏற்பாடுகளை வீரராகவா் கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியா்கள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


