திருவள்ளூா் அருகே மழையால் ஈரமான கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயமடைந்தனா்.
திருவள்ளூா் அருகே உள்ள சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகம். அவரது குழந்தைகளான வைஷ்ணவி (7), சஜித் (2) ஆகிய இருவரும் கடந்த 6-ஆம் தேதி, அங்கன்வாடிக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, வழியில் உள்ள விநாயகா் கோயிலில் விளையாடினா். மழை பெய்து சுவா் ஈரமாகி இருந்தநிலையில், கோயில் மேற்கூரை திடீரென இடிந்து குழந்தைகள் மேல் விழுந்தது. இதில், வைஷ்ணவியின் கால் விரல் துண்டானது; சஜித்தும் காயமடைந்தனா்.
இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பரணிதரன் அளித்த புகாரின்பேரில், கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

