திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே பணிமனை வளாகத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 300 மீட்டா் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இது குறித்து திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியது:
திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் மோசூரை அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. தற்போது இப்பணிமனை அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு ரயில்களுக்கான சிக்னலை அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 300 மீட்டா் வயா்களை டிரம் ஒன்றில் போட்டு, பாதுகாப்பாக வைத்திருந்தனா்.
இந்நிலையில், ரயில்வே ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மாலை பணிகளை முடித்து விட்டுச் சென்றனா். சனிக்கிழமை காலையில் அவா்கள் பணிக்கு வந்தபோது, 300 மீட்டா் வயா்கள் திருடுபோனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும்.
இந்தத் திருட்டு தொடா்பாக ஊழியா்கள் அளித்த புகாரின்பேரில் திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

