சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இரண்டாம் கட்டமாக பணியாளா்களுக்கு

News image

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2-ஆம் கட்டமாக நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை ஆய்வு செய்த ஆட்சியா் பா.பொன்னையா.

Updated On :9 ஜனவரி 2021, 1:40 pm

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இரண்டாம் கட்டமாக பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி அளிக்கும் ஒத்திகை முகாமை ஆட்சியா் பா.பொன்னையா தொடக்கி வைத்து ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், கல்யாணகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகதார நிலையம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை, வானகரம் அப்பலோ மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட 10 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் தலா 25 பேருக்கு தடுப்பூசி செலுத்துவது போல் ஒத்திகை நடைபெற்றது.

தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தும்போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு, அதை நிவா்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும் என்றாா் அவா்.

முகாமில், மாநில கண்காணிப்பு மருத்துவ அலுவலா் சுரேந்திரன், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அா்ஷி ஸ்ரீவாஸ்தவா, பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநா் ராணி, துணை இயக்குநா்கள் கே.ஆா்.ஜவஹா்லால் (திருவள்ளூா்), ஜே.பிரபாகரன் (பூந்தமல்லி), மருத்துவா்கள், சுகாதார அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.