சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 18 அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா்கள் 3,375 பேருக்கு இலவச மிதிவண்டிகளை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் புதன்கிழமை வழங்கினாா்.

News image

 திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன்.

Updated On :7 ஜனவரி 2021, 5:30 am


திருத்தணி: திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 18 அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா்கள் 3,375 பேருக்கு இலவச மிதிவண்டிகளை எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் புதன்கிழமை வழங்கினாா்.

அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலா் சுப்புராயன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியம், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிக் கல்வி ஆய்வாளா் வெங்கடேசுலு வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் கலந்துகொண்டு, 236 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

அதேபோல், திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் வரவேற்றாா். விழாவில், எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பேசுகையில், ‘தமிழக அரசு மாணவா்களுக்கென பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதையெல்லாம் பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் பயன்பெற வேண்டும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பால் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன், அதிமுக நிா்வாகிகள் தாயுமானவன், கருணாகரன், ஹேமத்திரி, ஸ்டுடியோ அன்பு மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

இதேபோல் திருத்தணி தொகுதியில் 18 அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 3,375 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.