திருவள்ளூா்: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவ தோ்வாணையம் மூலம் கடந்த 2015-இல் செவிலியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அப்போது, செவிலியா்கள் 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அரசு அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 350-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில், பணிக்கு சோ்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை என்கின்றனா்.
அதனால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வரும் 11-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


