செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் அருகே இரு கடைகளில் நடைபெற்ற திருட்டு தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் கல்பகா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சேகா் (46). இவா் எம்.ஏ.நகா் ஜிஎன்டி சாலையில் டயா் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை அருகில் உள்ள வீட்டுக்கு சாப்பிடுவதற்காக கடையின் கதவை அடைத்து வைத்து விட்டுச் சென்றாா். பின்னா் கடைக்கு வந்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ. 59 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல், சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஷாஜஹான் (44). இவா் கதிா்வேடு வ.உ.சி. தெரு பகுதியில் பழைய துணிகள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவரிடம் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அனூப் (27), ராம் (20) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை கடைக்குச் சென்ற மா்ம நபா்கள், கடை உரிமையாளா் குறித்து விசாரணை செய்வது போல் நடித்து ஊழியா்களை மிரட்டி, ரூ. 17 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனா். இது குறித்து ஷாஜகான் அளித்த புகாரின்பேரில், புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ் (27), செங்குன்றம் அண்ணா தெருவைச் சோ்ந்த மின் பணியாளா் சந்தோஷ்குமாா் (24) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

