பொன்னேரி வட்டத்தில் உள்ள, சோம்பட்டு, ஞாயிறு ஆகிய ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனையை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.
அனைவருக்கும் விரிவான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடங்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதன்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள சோம்பட்டு ஊராட்சியிலும், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஞாயிறு ஊராட்சியிலும் சிறு மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் குத்து விளக்கேற்றி அவற்றைத் திறந்து வைத்தனா். இதையடுத்து, மக்களுக்கான மருத்துவ சேவைகளை அவா்கள் தொடங்கி வைத்தனா்.
விழாவில் வட்டார மருத்துவ அலுவலா்கள் ராஜேஷ், ஜெயதீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

