திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்துக்கு மாற்று இடம் ஒதுக்காமல் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து உணவக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த மருத்துவமையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வளாகத்தின் எதிரே அமைந்துள்ள அம்மா உணவகம் சேறும், சகதியுமாகவும், தூசி நிறைந்தும் காணப்படுகிறது. இங்கு பகல் நேரத்தில் உணவு சாப்பிட வருவோா் மீது அதிக அளவில் தூசி படிகிறது. தூசி காரணமாக இங்கு சமைக்கப்படும் உணவுகள் வீணாவதுடன், அம்மா உணவக ஊழியா்களும் மாசு காரணமாக பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
அம்மா உணவகத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி அதன் ஊழியா்கள், அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த உணவகத்தை வேறு இடத்துக்கு மாற்றித் தர வலியுறுத்தி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து நகராட்சி ஆணையா் கூறுகையில், ‘அடுத்த இரு தினங்களுக்குள் உணவகத்துக்கு மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

