சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தைல மரங்கள் கடத்தல்: ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கைக் கோரி மனு

திருவள்ளூர் அருகே தைல மரங்களைக் கடத்திய செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்

Updated On :12 செப்டம்பர் 2013, 4:38 pm

திருவள்ளூர் அருகே தைல மரங்களைக் கடத்திய செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட செதில்பாக்கம் ஊராட்சித் துணைத் தலைவர் செல்லய்யா தலைமையில் ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இந்த மனுவை அளித்தனர்.

மனு விவரம்:

செதில்பாக்கம் ஊராட்சியில் 120 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கிராம மக்கள் ஒப்புதலுடன் வனத்துறையினர் தைலச் செடிகளை நட்டுவைத்து கிராமத்துக்காக ஒப்படைத்தனர்.

கடந்த 30 ஆண்டுகளாக அந்த மரங்களை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர், தனது ஆதரவாளர்களுடன் அனுமதியின்றி தைல மரங்களை வெட்டி வேறு மாநிலங்களுக்கு கடத்துகிறார்.

கிராமத்துக்கும், மரங்கள் உள்ள இடத்துக்கும் இடையே 2 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் உடனடியாக இச்சம்பவம் குறித்து மக்களுக்கு தெரிவதில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தப்படவிருந்த 60 டன் தைல மரங்களை கிராம மக்கள் கைப்பற்றினர்.

எனவே கிராமத்துக்குச் சொந்தமான மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்த செதில்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வனத்துறையினரிடமும் கிராம மக்கள் மனு அளித்தனர்.