திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு வேளாண் விதைப் பண்ணையில் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
÷திருவள்ளூரை அடுத்த தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (42). கொழுந்தளூரில் உள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
÷இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், அஜய், கிஷோர் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
÷தங்கமணிக்கு பிறவிலேயே கால் ஊனம் இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓர் விபத்தில் அதே காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.÷இதனால் அவர் தினமும் வலியில் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை காலையில் கிராம மக்கள் விதைப் பண்ணைக்கு வந்துள்ளனர்.
÷அப்போது அங்கு தங்கமணி வாயில் நுரையுடன் இறந்து கிடந்ததாகத் தெரிகிறது.
÷ இது குறித்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் போலீஸார் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
÷தங்கமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
÷மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

