மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
÷காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர் குடியிருப்போர் சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
÷கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் தசரதன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷பொதுச்செயலர் மதிமாறன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காக்களூர் ஊராட்சித் தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.
தீர்மானம்:
÷திருவள்ளூர் நகராட்சியையொட்டி காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. ÷இக்குடியிருப்பில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 1994-ம் ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
÷ஆனால் இதுவரை அதற்கான இணைப்புக் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த தொட்டி பயனற்று உள்ளது. எனவே இத்தொட்டியில் இணைப்பு ஏற்படுத்தி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

