சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டெங்கு காய்ச்சல்: இரு பெண்கள் பாதிப்பு

திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலஞ்சேரியில் டெங்கு காய்ச்சலால் சகோதரிகள் இருவர் பாதிக்கப்பட்டு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:53 pm

திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலஞ்சேரியில் டெங்கு காய்ச்சலால் சகோதரிகள் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

÷திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்டது வேலஞ்சேரி காலனி கிராமம். இங்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

÷இப்பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் - லலிதா தம்பதியினருக்கு நிவேதா (9), வர்ஷா (8) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

÷இவர்கள் இருவரும் அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

÷இந்நிலையில் கடந்த 17-ம் தேதி, நிவேதா மற்றும் வர்ஷா ஆகிய இருவருக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

÷இதையடுத்து அவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர்.

÷ஆனால் அதன் பின்னர் காய்ச்சல் தீவிரமடைந்ததால், அவர்கள் கடந்த 19-ம் தேதி திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

÷பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

÷அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

÷அவர்களுக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.