திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலஞ்சேரியில் டெங்கு காய்ச்சலால் சகோதரிகள் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
÷திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்டது வேலஞ்சேரி காலனி கிராமம். இங்கு 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
÷இப்பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் - லலிதா தம்பதியினருக்கு நிவேதா (9), வர்ஷா (8) என்ற இரு மகள்கள் உள்ளனர்.
÷இவர்கள் இருவரும் அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.
÷இந்நிலையில் கடந்த 17-ம் தேதி, நிவேதா மற்றும் வர்ஷா ஆகிய இருவருக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
÷இதையடுத்து அவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர்.
÷ஆனால் அதன் பின்னர் காய்ச்சல் தீவிரமடைந்ததால், அவர்கள் கடந்த 19-ம் தேதி திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
÷பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
÷அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
÷அவர்களுக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

