சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம்

திருவள்ளூர் அருகே மேம்பாலப் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:54 pm

திருவள்ளூர் அருகே மேம்பாலப் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

÷திருநின்றவூரை அடுத்த நெமிலிச்சேரி அருகே மீஞ்சூர்- வண்டலூர் இடையே வெளிவட்டச் சாலை மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.

÷இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும் "சர்வீஸ்' சாலை அமைப்பதற்காக அங்குள்ள 16 வீடுகளை அகற்ற சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

÷இதையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பொருட்டு புதன்கிழமை அங்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.÷அப்போது அப்பகுதி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.÷தகவலறிந்த  சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும நில எடுப்பு டி.ஆர்.ஓ. மோகனசுந்தரம், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அபிராமி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

÷அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை சில நாள்கள் ஒத்திவைப்பதாகவும், எனவே சில தினங்களில் இங்கிருந்து மாற்று இடத்துக்குச் செல்ல வேண்டும் என அவர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

÷இச்சம்பவத்தால் நெமிலிச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.