கிராமப்புறக் கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என பூசாரிகள் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட பூசாரிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறறது.
மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் ஜி.கோவிந்தராஜ், துணைத்தலைவர் வி.மோகன்சாமி தலைமை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் இ.சுப்பிரமணி வரவேற்றார்.
தீர்மானங்கள்: மாவட்டம்தோறும் இரு கிராமப்புறக் கோயில்களுக்கு அரசின் முழு மானியத்துடன் அன்னதானத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். கிராமப்புறக் கோயில்களில் பணியாற்றும் 10 ஆயிரம் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 1000 வழங்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நலவாரிய உறுப்பினர்களுக்கு முதல்வரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சித் தலைவர்கள் ஈகுவார்பாளையம் கே.எம்.எஸ்.சிவகுமார், பாதிரிவேடு நாகபூஷணம் முனுசாமி, "பூசாரிகள் குரல்' இதழ் ஆசிரியர் டி.புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் எஸ்.சங்கர், கே.எஸ்.சுந்தரம், மல்லிகார்ஜூனன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

