பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆங்காங்கே பஸ்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதால் திருவள்ளூரில் புதன்கிழமை இரவு வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி, திருவள்ளூர் பஸ் இரவு 7 மணியுடன் அனைத்து வெளியூர் பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
மேலும் பஸ் நிலையத்தில் இருக்கும் அறிவிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையும் பூட்டப்பட்டன.
இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ்கள் கிடைக்காமலும், அடுத்த பஸ் குறித்த எவ்வித தகவல் தெரியாமலும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் பல பயணிகள், சாலைகளில் செல்லும் லாரி, வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி வாசல்களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
இது போன்ற காலக்கட்டங்களில் போலீஸாரின் உதவியுடன் முக்கிய பகுதிகளுக்காவது பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

