மீஞ்சூர் அருகே இயங்கி வரும் இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உப்புநெல்வாயல் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் பா.ஜ.க. விவசாய அணி ஆகியவற்றின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்ட தேவம்பட்டு, உப்புநெல்வாயல் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன.
இப்பண்ணைகளில் இறால்களை சுத்தப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றுக்காக பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.
மேலும் மண்ணின் தன்மையும் கெட்டு விவசாயமும் பாதிக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு இறால் பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

