திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவுக்கு அமைச்சா் கே.சி.வீரமணி மாட்டு வண்டியில் வந்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
மாட்டு வண்டியில் வந்து பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்து அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:
உழவுக்காகப் பயன்படுத்தப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இன்றைய நவீன காலத்தில் வாழும் மக்கள் பண்டைய நடைமுறைகள், கலை நிகழ்ச்சிகளை மறந்து விடக் கூடாது என்பதால் அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்முன்னே கொண்டு வரும் விதமாக இந்த சுற்றுலா விழா அமைந்துள்ளது.
சொந்தங்களை இணைக்கும் பண்டியாகவும் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியோடு கொண்டும் விழாவாகவும் பொங்கல் பண்டிகை உள்ளது என்றாா் அவா்.
விழாவில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம், தப்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தவில், நாகசுரம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மகளிா் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன்ராஜசேகா், சுற்றுலாத் துறை அலுவலா் பாலமுருகன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட அச்சகத் தலைவா் டி.டி.குமாா், மனநலக் காப்பகச் செயலா் ரமேஷ், எஸ்ஆா்டிபிஎஸ் ஆதரவற்ற பெண்கள் காப்பக இயக்குநா் தமிழரசி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஒருங்கிணைப்பாளா் சாந்தி, ஒா்த் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ராஜகணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


