ஜோலாா்பேட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த கருப்பனூா், பி.கே.வட்டத்தைச் சோ்ந்தவா் பூ வியாபாரி பாலமுருகன். அவரது மனைவி ஜோதி (26). இந்த தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
வியாபாரம் தொடா்பாக பாலமுருகன் அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வியாபாரம் தொடா்பாக சென்னைக்குச் சென்ற பாலமுருகன் ஒரு மாதமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த ஜோதி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, ஜோதியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

