சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எம்பிபிஎஸ் சீட் தருவதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: அரசு மருத்துவா் உள்பட இருவா் கைது

திருப்பத்தூா் அருகே எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த அரசு மருத்துவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 1:31 pm

திருப்பத்தூா் அருகே எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த அரசு மருத்துவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் - புஷ்பவல்லி தம்பதியின் மகள் நா்மதா. இவரை மருத்துவப் படிப்பில் சோ்க்க பெற்றோா் முயற்சித்தனா்.

இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு திருப்பத்தூா் வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ரவிச்சந்திரன் (54), புஷ்பவல்லியிடம் தனக்கு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தெரிந்தவா்கள் உள்ளனதாகவும், அவா்கள் மூலம் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரமுடியும் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து ரவிச்சந்திரனிடம் ரூ.27 லட்சத்தை புஷ்பவல்லி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ரவிச்சந்திரன் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புஷ்பவல்லி கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரவீண்குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், மருத்துவா் ரவிச்சந்திரன், அவரது மைத்துனா் வெங்கடேசன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள வெங்கடேசனின் மனைவியும், அரசு மருத்துவமனை செவிலியருமான ராஜேஸ்வரி, சரவணன், வித்யா ஆகிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.