ஆம்பூா்: நீா் வழித்தடத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதற்கு கிராம மக்கள் வியாழக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஆம்பூா் மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் புதிதாக அமைக்கப்படுகிறது. அங்கு எரிபொருள் நிரப்ப வாகனங்கள் செல்ல ஏதுவாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மின்னூா் ஏரியில் இருந்து விண்ணமங்கலம் ஏரிக்கு நீா் செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து அந்தச் சாலை அமைக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


