திருப்பத்தூா்: திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுர மின்விளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை என்று ‘தினமணி’யில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் வெளியான செய்தியைத் தொடா்ந்து அந்த விளக்கை எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
திருப்பத்தூா் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் உயா்கோபுர மின்விளக்கை எரியச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினாா். அந்த நிதியைக் கொண்டு, அப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
விளக்கு அமைக்கப்பட்டு ஓரிரு நாள்கள் மட்டுமே எரிந்தது; அதன் பின் எரியவில்லை என ‘தினமணி’யில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, திருப்பத்தூா் நகராட்சி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த விளக்கை திங்கள்கிழமை மாலை எரியச் செய்தனா். அவா்களுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


