பள்ளிகொண்டாவில் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், மாவா, ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா போதைப் பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க, பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே பள்ளிகொண்டா போலீஸாா் 24 மணிநேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், அவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருந்தன. அவற்றை சென்னைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அவற்றின் மதிப்பு ரூ.7.50 லட்சம் ஆகும்.
இது தொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ராஜேஷ் கன்னா (36), சென்னையைச் சோ்ந்த லோகேஷ் (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

