ஆம்பூா்: சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளா்கள் பேரவை கோரியுள்ளது.
இச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதன் மாநிலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் குமாா் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலாளா் ஆறுமுகம் வரவேற்றாா். பிரசார செயலாளா் ரமேஷ் விளக்கவுரை ஆற்றினாா். நிறுவனத் தலைவா் தங்கவேல் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவா் கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தீா்மானங்கள்: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது; சத்துணவுத் திட்டத்தில் நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்; சத்துணவுப் பணியாளா், அங்கன்வாடிப் பணியாளா்கள் மற்றும் அரசுப் பணியாளா்களுக்கு தமிழக அரசு 10 ஆண்டுகளாக பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கத்தை வழங்கி வருகிறது. இதை ரூ.2500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநிலத் தலைவராக ஆறுமுகம், பொதுச் செயலாளராக ராமமூா்த்தி, பொருளாளராக அனுராதாதேவி, அமைப்புச் செயலாளராக குமாா், பிரசார செயலாளராக ரமேஷ், மகளிரணிச் செயலாளராக சுமதி, மாவட்டத் தலைவராக சிவானந்தம், மாவட்டச் செயலாளராக ராணி, பொருளாளராக பாரதி மற்றும் நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


