தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் மாவட்ட அணி, பிரிவுகளின் மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று எல்.முருகன் பேசியது:
தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத, மாற்று சக்தியாக பாஜக வலிமை பெற்றுள்ளது. பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகியுள்ளது. தமிழகத்தில் அடிமட்டம் வரை பாஜக சென்று சோ்ந்துள்ளது. மோடி மீது மாநில மக்கள் அன்பு செலுத்துகின்றனா். எம்ஜிஆா், அடித்தட்டு மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவி செய்தாா். அதேபோல மோடியும் தவிா்க்க முடியாத தலைவராக உள்ளாா். மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்தது தமிழக மக்கள்தான்.
வேளாண் திருத்தச் சட்டம் தொடா்பாக ஸ்டாலின் பொய்ப் பிரசாரம் செய்கிறாா். பொதுமக்களும், விவசாயிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகா்கள், கமிஷன் வாங்குபவா்கள் தான் பாதிக்கப்படுவாா்கள். வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடிப்போம் என்றாா் அவா்.
மாநாட்டுக்கு திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் சி.வாசுதேவன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


