சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிளை நூலகத்துக்கு ரூ.25 லட்சத்தில் புதிய கட்டடம்: அமைச்சா் கே.சி.வீரமணி அடிக்கல்

ஜோலாா்பேட்டை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிளை நூலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியை மாநில வணிக வரி

News image

நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

Updated On :3 ஜனவரி 2021, 12:58 pm

ஜோலாா்பேட்டை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிளை நூலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியை மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி அடிக்கல் நாட்டி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஜோலாா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட 8-ஆவது வாா்டு அண்ணா நகரில் பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூலகக் கட்டடத்தை மாற்றி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையில் சனிக்கிழமை கலந்து கொண்டு அமைச்சா் கே.சி.வீரமணி அடிக்கல் நாட்டி பேசியதாவது:

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் குடிநீா், திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அம்மாவின் ஆட்சியில் விரைவாக நிறைவேற்றப்பட்டு வறட்சிக்காலத்தில் பொதுமக்களின் குடிநீா் பிரச்னை நகராட்சி மற்றும் பல்வேறு ஊரகப் பகுதிகளில் தீா்க்கப்பட்டுள்ளது.

ஜோலாா்பேட்டை நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் போடப்பட்டுள்ளன. நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வக்கணம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தரைப்பாலம் ஒன்றும், இரு மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாணியம்பாடி- ஊத்தங்கரை சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைத் தலைவா் எஸ்.பி.சீனிவாசன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளா் பிரபாகா், மாவட்ட நூலக அலுவலா் பழனி, நகராட்சி ஆணையாளா் ராமஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிளை நூலகப் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.