ஆம்பூர் அருகே சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை இராணுவ வீரர்கள் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் ஜவான்ஸ் காக்கும் கரங்கள் என்ற குழுவை அமைத்து பணி முடிந்து விடுமுறையில் வருபவர்கள் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் கரானா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தேர்ந்தெடுத்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசியுடன் மளிகை பொருள்கள் தொகுப்பினை வழங்கினர். அதுமட்டுமில்லாமல் மாணவ, மாணவிகளுக்கு படிப்பிற்காக உதவி தொகை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிதிலமடைந்த சின்னவரிகம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதேபோல் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தேவலாபுரம் ஊராட்சியில் ஆம்பூர்-பேர்ணாம்படடு செல்லகூடிய சாலையில் சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை விடுமுறையில் தற்போது வந்துள்ள ஆம்பூர் ஜவன்ஸ் காக்கும் கரங்கள் ராணுவவீரர்கள் ஒன்றிணைந்து நிழற்குடையை புதுப்பித்து உள்ளனர்.
கூடுதலாக, பெண் பயணிகளின் வசதிக்காக பெண்கள் கழிப்பறை ஒன்றும் கட்டியுள்ளனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு பரிசாக பயணிகள் நிழற்குடை மற்றும் பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அடைந்து உள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


