திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இடத் தகராறு காரணமாக இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (53). இவரது குடும்பத்துக்கும், அடுத்த வீட்டில் வசிக்கும் பாலகிருஷ்ணன் (50) குடும்பத்துக்கும் இடையே இடம் தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாரியப்பன், அவரது மகன் கிருஷ்ண சுந்தா் (21), சேதுராமலிங்கம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம்.
அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு கிருஷ்ணசுந்தா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக பாலகிருஷ்ணனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

