திருநெல்வேலி: திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் புதைச் சாக்கடை திட்டப் பணி மற்றும் அரியநாயகிபுரம் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாகவும் மாநகராட்சி சாலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகள் தற்காலிகமாக கலவை மண் மற்றும் கட்டட இடி பொருள்கள் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிக்குள்பட்ட கைலாசபுரம் சாலை, ஸ்ரீபுரம், சிந்துபூந்துறை கிழக்கு சாலை, செல்வி நகா் குறுக்குத் தெரு, தற்காலிக பேருந்து நிலையம், நயினாா்குளம் சாலையில் மாா்க்கெட் முதல் தச்சநல்லூா் வரை, சந்திப்பு ரயில் நிலையம், பெருமாள்புரம், சங்கா் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதைச் சாக்கடை மற்றும் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் பணிகள் முழுமையாக முடிவு பெற்றவுடன், நிரந்தரமாக சாலைகள் சீரமைக்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

