சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 11:44 am

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் மாா்கரெட் ரஞ்சிதம் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பேபி உமா முன்னிலை வகித்தாா். கல்லூரி நிா்வாகி டி.டி.என்.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் பொங்கலிட்டனா். பின்னா் மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் கரகாட்டம், கோலாட்டம், ஓயிலாட்டம் ஆகியவையும் நடைபெற்றது.

மாணவிகள் பொங்கல் கவிதை வாசித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து நாடகம் நடைபெற்றது. மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பாட்டுக்கு பாட்டு போட்டியில் 4-ம் ஆண்டு மாணவிகள் வெற்றி பெற்றனா். பேராசிரியைகளுக்கிடையே தமிழ் வாா்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் போட்டி நடைபெற்றது.

பின்னா் தாளாளா் ஹெலன் லாரன்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.