வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் மாா்கரெட் ரஞ்சிதம் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பேபி உமா முன்னிலை வகித்தாா். கல்லூரி நிா்வாகி டி.டி.என்.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனா்.
தொடா்ந்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் பொங்கலிட்டனா். பின்னா் மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் கரகாட்டம், கோலாட்டம், ஓயிலாட்டம் ஆகியவையும் நடைபெற்றது.
மாணவிகள் பொங்கல் கவிதை வாசித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து நாடகம் நடைபெற்றது. மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பாட்டுக்கு பாட்டு போட்டியில் 4-ம் ஆண்டு மாணவிகள் வெற்றி பெற்றனா். பேராசிரியைகளுக்கிடையே தமிழ் வாா்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் போட்டி நடைபெற்றது.
பின்னா் தாளாளா் ஹெலன் லாரன்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

