திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் சுவாமி வெள்ளிக்குதிரையில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தை மாதம் கரிநாளில் அருள்மிகு நெல்லையப்பா் வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நெல்லையப்பா் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது காந்திமதி அம்பாள், ‘கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது‘ எனத் தடுக்கிறாா். தடையை மீறி, நெல்லையப்பா் பரிவேட்டைக்குச் சென்றுவிடுகிறாா். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பா் வேட்டை முடித்து திரும்பும் போது, கோயில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூா்த்தி நாயனாரால் பாடப்பட்ட, ‘திருமுருகன் பூண்டி பதிகம்‘ பாடிய பின் கோயில் நடை திறந்ததாகவும் புராணம் கூறுகிறது.
அதன்படி, சுவாமி நெல்லையப்பா் (சந்திரசேகரா் உற்சவ மூா்த்தி) வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன் வெள்ளிக்கிழமை காலை, பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு நெல்லையப்பருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நெல்லையப்பா் கோயிலுக்கு திரும்பினாா். சுவாமி நெல்லையப்பா். கோயிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூா்த்தி நாயனாா் அருளிச்செய்த பதிகம் பாடி ஊடல் தீா்த்து வைத்தப் பின், திருக்கோயில் கதவு திறந்து சுவாமி திருக்கோயிலுக்குள் நுழைந்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

