மதுரை தென்மண்டல காவல்துறை தலைவா் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான காவல் நிலைய எல்லைகள் பிரிக்கப்பட்டு வியாழக்கிழமை (ஜன. 14) அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இருந்து புதுப்பட்டி, காசிநாதபும், ராமநாதபுரம் , முக்கூடல் காவல் நிலையத்தில் இருந்து ஓடைமறிச்சான், காத்தாத்தாபுரம், உடையாம்புளி, கொல்லாங்குளம், மருதம்புத்தூா், கண்டபட்டி, சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் இருந்து மாறாந்தை, செட்டிகுறிச்சி, கள்ளத்திகுளம், நாலாங்குறிச்சி ஆகியவை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கும், அடைச்சாணி, மலையன்குளம் ஆகியவை ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்திற்கும் மாற்றப்படுகின்றன.
தென்காசி மாவட்டம் பனவடலிச்சத்திரம் காவல் நிலையத்தில் இருந்து மேல நரிக்குடி, கீழ நரிக்குடி, வெங்கடாசலபுரம், பெருமாள்பட்டி, அய்யாபுரம் காவல் நிலையத்தில் இருந்து வெள்ளப்பநேரி, வெயில்காந்தபுரம், ராமையன்பட்டி, முத்தையாபுரம், வடக்கு பூலாங்குளம், தெற்கு பூலாங்குளம், ராமசாமியாபுரம் ஆகிய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் வியாழக்கிழமை (ஜன. 14) அமலுக்கு வரும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

