சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றுப்பாலம் மூழ்கியதையடுத்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமாா் 20 கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டை வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீா், காட்டாற்று வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரில் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீா் செல்கிறது. இதனால் சீவலப்பேரியில் உள்ள தாமிரவருணி பாலம் மூழ்கியது. திருநெல்வேலி-சீவலப்பேரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சீவலப்பேரி சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கிராம மக்கள் மோட்டாா் சைக்கிள்களில் தாழையூத்து வழியாக பாளையங்கோட்டை வந்து பொருள்கள் வாங்கிச் சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

