சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சீவலப்பேரியில் பாலம் மூழ்கியது

சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றுப்பாலம் மூழ்கியதையடுத்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 1:04 pm

சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றுப்பாலம் மூழ்கியதையடுத்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமாா் 20 கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டை வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீா், காட்டாற்று வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரில் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீா் செல்கிறது. இதனால் சீவலப்பேரியில் உள்ள தாமிரவருணி பாலம் மூழ்கியது. திருநெல்வேலி-சீவலப்பேரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சீவலப்பேரி சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கிராம மக்கள் மோட்டாா் சைக்கிள்களில் தாழையூத்து வழியாக பாளையங்கோட்டை வந்து பொருள்கள் வாங்கிச் சென்றனா்.