திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் பொறுப்பேற்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சிக்கு மாநில, மாவட்ட நிா்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவராக கே.சங்கரபாண்டியன், தென்காசி மாவட்டத் தலைவராக பழனிநாடாா் ஆகியோா் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவராக கே.பி.கே. ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து மூவரும் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
முன்னதாக கட்சி வளாகத்திலுள்ள காமராஜா், இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், கட்சியின் மாநில பொதுச் செயலா் விஜய் வசந்த், முன்னாள் எம்பி ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏக்கள் ரவி அருணன், பா. வேல்துரை, மாவட்ட பொருளாளா் ராஜேஷ்முருகன், பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

