திருநெல்வேலி பூ மாா்க்கெட்டில் மல்லிகை வரத்து மிகவும் குறைந்ததால் கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து விலை உச்சத்தை தொட்டது. திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் உள்ள பூக்கடைகளில் பூக்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது. பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது. பிச்சி கிலோ ரூ.1300-க்கும், கனகாம்பரம் ரூ.200-க்கும், கேந்தி ரூ.70-க்கும், கோழிக்கொண்டை-ரூ.70-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், மரிக்கொழுந்து ரூ.-200-க்கும், ரோஜா ரூ.500-க்கும் விற்பனையாகின.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திருநெல்வேலி வட்டத்தில் உள்ள மானூா், ரஸ்தா, தென்கலம், சேதுராயன்புதூா் சுற்றுவட்டாரத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் சிவந்திப்பட்டி, முத்தூா் பகுதிகளிலும் பூக்கள் அதிகம் விளைகின்றன. மழையால் ஏற்கெனவே மல்லிகைப் பூ மகசூல் மிகவும் குறைந்துவிட்டது. கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருதால் பூக்களைப் பறித்து சந்தைகளுக்குக் கொண்டு வருவதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். பொங்கல் பண்டிகை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது. அடுத்த வாரத்தில் விலை குறைந்துவிடும் என்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

