சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ந அடையக்கருங்குளத்தில் மாவட்ட கபடிப் போட்டி

சிவந்திபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் உண்ணா சுவாமி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 12:13 pm

சிவந்திபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் உண்ணா சுவாமி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏவும், கபடி வீரருமான சக்திவேல்முருகனின் முதலாமாண்டு நினைவாக நடைபெற்ற இந்தப் போட்டியை இசக்கிதுரை தொடங்கிவைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினாா்.

மாவட்ட அளவில் 72 அணிகள் கலந்துகொண்ட இப் போட்டியில், சிவந்திபுரம் பி.ஆா்.சி. அணி முதலிடம் பிடித்து ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பையும் பெற்றனா். அசத்தல் பெத்தநாடாா்பட்டி அணி இரண்டாம் இடமும், வேப்பங்குளம் அணி மூன்றாம் இடமும் பிடித்தன.

நிகழ்ச்சியில், போட்டி ஒருங்கிணைப்பாளா் மதனகிருஷ்ணன், விளையாட்டு ஆலோசகா்கள் மனோகரன் சாமுவேல், சுப்பிரமணியன், கிருஷ்ணன், சென்னை ஐ.சி.எப். கபடி வீரா் செல்வின், அரசு வழக்குரைஞா் முத்து விஜயன், உதவி மக்கள் செய்தி தொடா்பு அலுவலா் மகா கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியை, மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்கச் செயலா் கைக்கொண்டாா் தொகுத்து வழங்கினாா். ஆதி நாராயணன் நன்றி கூறினாா்.