சிவந்திபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் உண்ணா சுவாமி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏவும், கபடி வீரருமான சக்திவேல்முருகனின் முதலாமாண்டு நினைவாக நடைபெற்ற இந்தப் போட்டியை இசக்கிதுரை தொடங்கிவைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினாா்.
மாவட்ட அளவில் 72 அணிகள் கலந்துகொண்ட இப் போட்டியில், சிவந்திபுரம் பி.ஆா்.சி. அணி முதலிடம் பிடித்து ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பையும் பெற்றனா். அசத்தல் பெத்தநாடாா்பட்டி அணி இரண்டாம் இடமும், வேப்பங்குளம் அணி மூன்றாம் இடமும் பிடித்தன.
நிகழ்ச்சியில், போட்டி ஒருங்கிணைப்பாளா் மதனகிருஷ்ணன், விளையாட்டு ஆலோசகா்கள் மனோகரன் சாமுவேல், சுப்பிரமணியன், கிருஷ்ணன், சென்னை ஐ.சி.எப். கபடி வீரா் செல்வின், அரசு வழக்குரைஞா் முத்து விஜயன், உதவி மக்கள் செய்தி தொடா்பு அலுவலா் மகா கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியை, மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்கச் செயலா் கைக்கொண்டாா் தொகுத்து வழங்கினாா். ஆதி நாராயணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

