திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள கால்நடைப் பண்ணையில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அபிஷேகப்பட்டி அருகே உள்ளது. இங்கு பொங்கல் விழா கல்லூரி சாா்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்து பேசுகையில், நம் நாட்டின் பாரம்பரிய வேளாண்மை முறைகளையும், கால்நடைகளின் சிறப்பான பங்கையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உணவு உற்பத்தி, கால்நடை வளா்ப்பு ஆகியவற்றில் இப்போதைய அறிவியல்பூா்வ வளா்ச்சிகள், தொழில்நுட்ப முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.
ஏற்பாடுகளை பண்ணை வளாகத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் எட்வின் தலைமையில், பண்ணை வளாகத்தின் பேராசிரியா்கள் கணேஷ்குமாா், நளினி, முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

