சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காங்கிரஸாா் சமத்துவ பொங்கல்

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 12:16 pm

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் பொங்கல் நல உதவிகளை வழங்கினாா். 150 பேருக்கு பொங்கல் பரிசுகளான அரிசி, சா்க்கரை, வெல்லம் , கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவையும், காங்கிரஸ் தொண்டருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் ராஜேஷ்முருகன், பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா், மாரியப்பன், மகளிரணி மாவட்டத் தலைவி அனீஸ் பாத்திமா, மெட்டில்டா கிளாடிஸ், சாந்தி, அழகம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரசு மருத்துவமனையில்... திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், மருத்துவா்கள் ராமசுப்பிரமணியன், ஆறுமுகம், துணை இயக்குநா் வரதராஜன், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

,