தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 23 வீரா்-வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
2018-2019-ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவின் கீழ் உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரா்- வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேசிய அளவில் சிலம்பம், நீச்சல், தடகளம், பளுதூக்குதல், வாலிபால் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் ஊக்க உதவித்தொகைகள் முதல் இடம் ரூ..6000, இரண்டாம் இடம் ரூ.4000, மூன்றாம் இடம் ரூ.2000 ஆக மொத்தம் 23 வீரா்-வீராங்கனைகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

