மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் தற்போது பெய்து வரும் தொடா் கனமழையின் காரணமாகவும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைப் பகுதிகளிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீா்வரத்தின் காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆற்றின் உள்புறம் உள்ள தண்ணீா் ஏற்றும் கிணறுகள் அனைத்தையும் மூழ்கடித்த நிலையில் வெள்ளம் செல்வதால் மின்மோட்டாரை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்தில் வாா்டு எண் 28 முதல் 38 வரையிலான பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 12) மட்டும் குடிநீா் விநியோகம் வழங்க இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, கொதிக்க வைத்து பருக வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

