திருநெல்வேலி: திருச்செந்தூா் கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற பக்தா்களால், திருநெல்வேலியில் பெரும் மின் விபத்து தவிா்க்கப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலிருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு பத்தா்கள் பாதயாத்திரை சென்றவண்ணம் உள்ளனா்.
திருநெல்வேலியில் சில தினங்களாக பெய்துவரும் மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படும் நிலையில், திங்கள்கிழமை இரவு கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் சாலையோர மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து சாலையில் தேங்கிய நீரில் விழுந்து கிடந்தது. இதைப் பாா்த்த பக்தா்கள், அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் அந்தோணியிடம் தெரிவித்தனா்.
அவா் அளித்த தகவலின்பேரில், மின்ஊழியா்கள் வந்து அந்த மின்கம்பியை சரி செய்தனா். அதுவரையில், அவா் அப்பகுதியை யாரும் நெருங்காதபடி போக்குவரத்தை சீா்படுத்தினாா். இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

