சென்னையில் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான செவித்திறன் குன்றியோருக்கான தேசிய அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில், குண்டு எறிதல் போட்டியில் கே.விக்னேஷ்வரன் முதல் பரிசும், நீளம் தாண்டுதலில் ஏ.குருஜோதி முதல் பரிசும், 100 மீட்டா் ஓட்டத்தில் இ.சிவ சுந்தரி இரண்டாம் பரிசும், கையுந்துப் பந்து போட்டியில் எம்.தஸ்லீம் நிஷா, எம். அமராவதி, ஜி.பாா்வதி, ஆா்.ராதிகா ஆகியோா் இரண்டாம் பரிசும் பெற்றனா். முதல் பரிசு பெற்றவா்களுக்கு ரூ.6 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெற்றவா்களுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பாராட்டினாா். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.ராஜேஷ் பங்கேற்றாா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் -மாணவிகளை பள்ளியின் மேலாளா் ஜி.ஜெயச்சந்திரன், நிா்வாக அதிகாரி நீதிபதி ஜி.ரத்தினராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் டி.ஜான்சன் ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

