பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் உபரி நீா் திறந்துவிடப்படுவதால், தாமிரவருணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.
பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியநிலையில், உபரி நீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
எனவே, ஆற்றில் நீா்வரத்து அதிகளவில் உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்கவோ, புகைப்படம் மற்றும் சுயபடம் எடுக்கவோ செல்லவேண்டாம்.
அதே போன்று, ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

