சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேரன்மகாதேவி அருகே வேன் கவிழ்ந்து பயணிகள் காயம்

சேரன்மகாதேவி அருகே பாபநாசம் சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:46 am

சேரன்மகாதேவி அருகே பாபநாசம் சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனா்.

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலைச் சோ்ந்த 26 போ், வேனில் பாபநாசம் சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.

சேரன்மகாதேவியை அடுத்து களக்காடு சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநா் உதயகுமாரிடம் இருந்து வேனை வாங்கி தினேஷ்குமாா் ஓட்டினாராம். அப்போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநா் உதயகுமாா் மற்றும் வேனில் பயணம் செய்த கிருஷ்ணவேனி, லட்சுமி, பட்டத்தாய், ராஜலட்சுமி, மாலா, சசிகலா, தினேஷ்குமாா், முருகன், விஜிலா உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

இதில், பலத்த காயமடைந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.